Friday, September 5, 2008

மனைவியின் சக்தி



Get Loveyou Graphics
உன் தேவைகளை எல்லாம் பார்த்து பார்த்து
செய்கின்ற நான்...
என் தேவைகளை எல்லாம்
எப்படி மறந்து போகிறேன்
என்றே தெரியவில்லை.....
எனக்கு பிடித்தமானவற்றை
எல்லாம் விட்டுவிட்டு.....
உனக்கு பிடித்தமானவற்றை
நேசிக்ககற்றுக்
கொண்டபோதுதான்....
என்னுள் சந்தோசம் பிறக்கிறது....
என்சமையலை நீ..பாராட்டும்...
போதெல்லாம் வியக்கிறேன்....
"எப்படி என்னால் முடிகிறது"
உன் பாராட்டை பெறுவதற்காகவே...
நான் சமைத்த உணவுகள் எல்லாம்...
மேசையில் போட்டியிடுகின்றன
புரியுமா உனக்கு....
கனவில் கூட நீதான் வரவேண்டும் என்று ...
என் தூக்கம் கூட அடம்பிடிப்பதை....
உன்னிடம் எப்படிச் சொல்வேன்...
உனக்குரிய கடமைகளை...
நிறைவேற்றும் போதுதான்..
என் மனம் உற்சாகப்படுகின்றது....
"எப்படி உன்னால் மடடும் எல்லாம் முடிகிறது"
நீ சிரிக்கும் போதுதான் நான் சிலிர்க்கிறேன்...
உனக்கு முன்பே இறந்து விட வேண்டும் என்று
கடவுளை வேண்டுகின்ற நான்...
நீ பிறந்த பின்பு தான் பிறக்க
வேண்டும்போதுதான் ....
அடுத்த பிறவியிலும் நானே
உன் மனைவியாக சந்தோசமடைகிறேன்..
எல்லாவற்றையும் விட...
உன் இலட்சியப் பாதையில்...என
வாழ்வை தியாகம் செய்யும் போது தான்...
வாழ்வின் அர்த்தம் புரிகிறது...
"இதுதான் காதலின் சக்தியா"
நீ கேட்கும் போதெல்லாம்..
சொல்ல நினைக்கிறேன்..
இதுதான் மனைவியின் சக்தி...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..