Thursday, September 17, 2009

முடியுமா உங்களால்....

நேற்றுப் போல் இருக்கின்றன நினைவுகள் எல்லாம்....
ஊர்விட்டு ஒடிவந்து.....
உணர்விழந்து....என்
உயிர்மடடும் காத்து....
ஏன் வந்தேன்....
துப்பாக்கி சத்தங்களும்...
நின்றுபோய்விட்டாலும்..என் நினைவில்...
கேட்டபடியேதான்...
பொழுது புலராது ஒருகாலை நேரம்...
துரத்திவந்த துப்பாக்கி குண்டுகளில்...மாண்டுபோன
என்அம்மாவும...
மாமாவும்....
மறுநாள்...ஆட்லறியில்...
துடிதுடித்து செத்துப்போன...என்
அப்பாவும் தங்கையும்....
அள்ளி எடுத்து அழவும் முடியவில்லை...
செத்த வீடுகள் எல்லாம்...
மறுபடியும்...
மறுபடியும்...
சாவீடுகளாகத்தான்....
எல்லாம் நேற்றுப் போல்...
இருக்கின்றன....பாதைதறந்தாலும்
பயணம் மாறினாலும்....
ஊருக்கு போனாலும்...
உதவிகள்தான் நீர் தந்தாலும்...
அநியாயமாய் நீர் அழித்த ...
என் அம்மாவை...
என் அப்பாவை...
என்உடன் பிறப்புகளை....
திருப்பித்தர முடியுமா உங்களால்...
ஊர்விட்டு வந்தேன்அகதியாய் தான்...
ஊர் போகின்றேன்...அநாதையுமாய்....

Thursday, September 10, 2009

என் கவி

கனவு ஒன்று கண்டு அது கலைந்து
விழித்திருக்கையிலே...
கவியொன்று உள்ளமதில் கருக்கொள்ளும்...
கருக்கொண்ட கவிதன்னை காகிதத்தில் வடிப்பதற்கு...
எனதுள்ளம் துடிக்கும்...ஆனாலும்
தூக்கம் கண்ணைத் தழுவும்....
விடியும்...
வேலை...
விளையாட்டு ...
வீண் அரட்டை என்று...
நேரம் பறக்கும்....இப்படியே....
இப்படியே...
கருக்கொண்ட என் கவியெல்லாம்...
கர்ப்பத்திலே கலைந்து விடும்...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..