Friday, August 15, 2014

அவள் தயாராகவில்லை...


அவன் நினைவுகளில் இருந்தும் விடுபட
அவள் தயாராகவில்லை
கேட்டுக்கொண்டிருத்தலை மட்டுமே அவளால் செய்ய முடிகின்றது
இன்று தவறிப்போன அழைப்பிற்காக…
நாளையும்…
நாளைமறுதினமும்
அதற்கு அடுத்த நாளும் அவள்
காத்திருக்கப்போகின்றாள்…
ஆனாலும்..
இன்றைய நாளின் வலி நாளை இருக்கப்போவதில்லை என்பது
அவளுக்கு தெரியும்..
அதற்காக  காத்திருத்தல்களில் இருந்தும் விடுபடவும்
அவள் தயாராகவில்லை

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..