இன்றுடன் நான் செத்து…
இரண்டு வருடங்களாம்…
நம்ப முடியவில்லை
நேற்றுப்போலிருக்கிறது…
அம்மாவின் அழு குரலும்
அக்காவின் ஓலமும்…
அப்பாவின் புலம்பலும்…
கேட்கின்றன
என் செவியில் இன்னும்…
வாழத்தான் ஆசைப்பட்டேன்
வாழவிடவில்லையெனை…
ஏழுவயதினிலே…எமலோகம்
வருவேனென
யாரும் நினைக்கவில்லை
நானும் நினைக்கவில்லை…
எறிகணையின் சிதறல்கள்
என் உடலை துளைத்தபோது...
அம்மா…நான் உனை நினைத்தேன்…
தப்பவே மாட்னே; என உணர்ந்தபோது…
அப்பாவும்;…..அக்காவும்
வந்தார்கள் கண்முன்னே…
என் பள்ளிக் கூடமும் வந்து போனது
ஒர் நொடியில் நா வறள…உயிர்துடிக்க
மூச்சு விட முடியாமல்;;…
ஓரு மூன்றே நிமிடத்தில் நான் செத்துப்போனேன்…
செத்துப் போன இந்நாளில்
திவசம் நீர் செய்ய ...
வந்திருந்து பார்க்கின்றேன்…
வார்த்தைகள் வரவில்லை…
கண்ணில் நீர் கோர்க்கின்றேன்
அம்மா…
ஏன் கொன்றார் என்னை….!