Wednesday, August 27, 2008

மொழி

கோபமாய் யாரையும்
ஏசியது கூட இல்லை
நான்...
என் மொழியை மிக நேசிப்பவள்.

முரண்




அவனும் நானும்..
எப்பவும் சண்டை போடுவோம்...
எனக்கும் அவனைப் பிடிப்பதில்லை...
அவனுக்கும் என்னைப் பிடிப்பதேயில்லை....
கதைக்காத பொழுதெல்லாம் அம்மாதான்..
கைபிடித்து விடுவாள்....
'கண்ணா... இவளையும் பள்ளியில
விட்டுவிடு.... .".
அம்மாதான் ஏற்றிவிட்டாள்
முதன் முதலாக.......
தைப்பொங்கலா....;
'கண்ணாவை கூப்பிடு....!
வருடப்பிறப்பா கண்ணாவை கூப்பிடு...
தீபாவளியா ....
'கண்ணா எங்கே...?
அம்மா தான் கேட்பாள்....
நான்தான் ஓடிப்போய் கூட்டி வருவேன்....
ஒருநாள்....
அப்பா வாங்கிவந்த
சாக்லெற்றை...
முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட..
;..'கண்ணாக்கு கொடு;க்கவில்லையா...".
அம்மாதான் ஏசினாள்....
'இந்தா இதைக் கொடு...".
என்று
வேறு சாக்லெட் தந்தவளும் அம்மாதான்...

நீண்டநாட்களின் பின் ஒருநாள்…
புதுச்சட்டையுடன்...
பள்ளிக்கு வெளிக்கிட்டு பாத்திருந்தேன்....
கண்ணனுக்காக...
வந்தான் சிரித்தபடி...
அம்மாவும் வந்தாள்
;..'கண்ணா நீ போ இனிமேல்
அவள் அண்ணாவுடன் வருவாள்... .".
அம்மாதான் சொன்னாள்....

அவனுக்கும் புரியவில்லை ....
எனக்கும் புரியவில்லை...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..