சின்ன வயதில்
பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா
பாசத்தோடு..
கூண்டில் அடைத்த கிளியை..
அவர் பார்வையில் தப்பி..
பாவப்பட்டு திறந்து விட்டபோதும்…
என் சின்னத் தம்பி
ஒருநாள்..
தும்பிபிடித்து கட்ட முயன்ற போது
தும்மி அது கலைத்து
காத்தபோதும்…
தெருவோரம் அடிபட்டு கிடந்த
நாய்க்குட்டி தனை தூக்கிவந்த
சோறூட்டி…
காயம் ஆற்றியபோதும்
ஆசையாய் வைத்த பூச்செடி
வாடுகையில்
குடை வைத்து போனபோதும்…
வல்லூறு ஒன்று
தன் குஞ்சை தூக்கி செல்ல
குரல் கொடுத்த கோழி பார்த்து
கண்கலங்கி நின்றபோதும்…
தொலைந்து போகாமல் இருந்த
மனிதம்…
இன்று…யாரோ
பிச்சைக்காய் நீட்டிய கையை
தட்டிவிட்டு வந்ததில்
தொலைந்து போனது…