Tuesday, October 28, 2014

பலிஆடு


வாஞ்சையோடு அணைத்ததும்…
மேனியெங்கும் முத்தமழை பொழிந்ததும்
செவியோடு
இரகசியமாய் செல்லம் கொஞ்சியதும்
இன்றுவரையில்லாத
அன்பையெல்லாம் கொட்டிக்கொடுத்ததுவும்
தன்னை பலியிடத்தான் என்று…
பாவம் அந்த ஆட்டிற்கு
அப்போது தெரிந்திருக்கவில்லை…
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..