Wednesday, April 23, 2014

வீதி விபத்து

வீதி விபத்து இருவர் பலி
இன்றைய செய்தியில் இதைப்படித்தேன்…
நேற்றைய செய்தியிலும்
இப்படித்தான் படித்தேன்…
நேற்றைக்கு முதல் நாளும்...
அதற்கு முதல் நாளும் கூட
இதே செய்தியை படித்தேன்
சென்ற கிழமை..
அதற்கு முதற் கிழமை..
போன மாதம்..
என ஒவ்வொரு நாளும்
இதே செய்தியை படித்தேன்
படிக்கிறேன்..
ஆனால்..
நான்கு வருடங்களுக்கு முன்னர்
இபபடிப்பட்ட செய்தியை படித்ததேயில்லை…

பேசும் கிளி பொம்மை






சின்ன வயது பிறந்தநாள் ஒன்றில்
அபபா வாங்கி தந்த அழகிய பொம்மை..
“பேசும் கிளிப் பொம்மை”
பச்சை வண்ண மேனி
இச்சை கொள்ள செய்யும்
இளஞ் சிவப்பு உதடுகள்
கொள்ளை அழகு
எனக்கே எனக்காக…
பேசும் கிளி…
அம்மா என்றழைத்தால் அதுவும் அழைக்கும்+
அப்பா என்றால்
அதுவும் அப்பா சொல்லும்
என் பெயர் சொன்னால் மீண்டும் சொல்லும்
எப்போதும் சொல்லி கேட்பேன் என் பெயர்..

பசிதூக்கம் மறந்து பச்சை கிளியே என் சொந்தமானது
பாய்ந்து தங்கை பறித்து செல்லாள்..
தா..”வென தம்பியும் விழுந்து அழுவான்
தரவே தரமாட்டேன்
அம்மாவின் கெஞ்சலக்காய் அரை நொடி கொடுத்து
படக்கென பிடுங்கி பத்திரமாய் வைப்பேன்..
பள்ளிக்கு போனபின்னால்… தங்கை எடுப்பாள்
தலை திருப்பி வைப்பாள்…
வேண்டாம் தொல்லையென…
என்னுள் எண்ணி…
கதிரை வைத்து மேவை மேல் ஏறி
பரணின் ஓரம் மெல்ல வைத்தேன்..
கிளி பறந்தது  என்று சொல்லி
பேசாதிருந்தேன் …
அவ்வப்போ நான் மட்டும் பரணில் ஏறி பார்த்தது இறங்கினேன்
சில நாள் செல்ல மெல்ல கிளியும் மறந்து போயிற்று..

காலம் மெரல்ல நகர்ந்து நெல்ல
ஊர்விட ;டோடிய ஓர் நாள் பொழுதில்..
கிளியும் சுத்தமாய் மறந்து போனது எல்லாம் போலவே..

பதினைந்து வருட இடைவெளி பின்னர்
அதே வீடு…
அதே நான்…யாருமற்ற தன்மையின் பிடியில்…
சுத்தப்படுத்த ஏறிய பரணில்…
எனது கிளி… அதே பேசும் கிளி…
பச்சை வர்ணம் மெல்ல கரைந்திருந்தது..
உதடுகள் இரண்டும் தனியே கிடந்தன…
பேமுடியவில்லை வாய்திறந்து அதனால்..
மெல்ல எடுத்து அழுத்தி துடைத்து
உதடுகள் ஒட்டி பத்திரப்படுத்தினேன்..
இப்பவும்…
அவ்வப்போ அது சொல்லும் அழகிய நினைவுகள்…
என் கிளி..
அப்பா வாங்கித் தந்த அழகிய கிளி..
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..