Thursday, October 10, 2013
மன்னிப்பாயா..
ஏதோ ஒரு வரி
உனக்காய் எமுதணும் சற்றும் எதிர்பாரா
குற்றம் ஒன்று
சாற்றின் நீ மன்னிப்பாயா…
காற்றோடு நீ போனாய்
கனவுகளை அள்ளிச் சென்றாய்
கவிதைகளை மட்டும்
மிச்சம் வி;ட்டுச் சென்றாய்
பட்டுப்போனதொரு கவி மரம்
தொட்டுத் துளிர்விட வியக்கின்றேன்
நீயா…
இல்லை…
நீயில்லை
அந்த யாரோ எனை
அழைக்கும் போதெல்லாம்….
உன்குரலாய்
உன் கெஞ்சல்களாய்…
மறந்துவிட நினைக்கும்
உன் ஞாபகங்களை
மறுபடியும் தூசிதட்டி
தந்துவிட்டதாய்…
ஒரு மயக்கம்…
ஒரு தடம் மாற்றம்…
சிறு சலனம்…
எல்லாம் ஒன்றாய்…
என்னை மன்னிப்பாயா…
Subscribe to:
Posts (Atom)