Thursday, October 10, 2013

நினைவில் நனைதல்



என் பிரியத்திற்குரிய
புத்தகத்தின்
பக்கங்கள்
கிழிக்கப்பட்டுவிட்டன..
மூடிவைத்திருந்த மயிலிறகும்
தொலைந்து போய்விட்டது
என்ன ஆச்சரியம்…!
மறுபடியும் அதே புத்தகம்
ஒட்டப்பட்டு…
அழகாய்..மயிலிறகும்…

மன்னிப்பாயா..


ஏதோ ஒரு வரி
உனக்காய் எமுதணும் சற்றும் எதிர்பாரா
குற்றம் ஒன்று
சாற்றின் நீ மன்னிப்பாயா…
காற்றோடு நீ போனாய்
கனவுகளை அள்ளிச் சென்றாய்
கவிதைகளை மட்டும்
மிச்சம் வி;ட்டுச் சென்றாய்
பட்டுப்போனதொரு கவி மரம்
தொட்டுத் துளிர்விட வியக்கின்றேன்
நீயா…
இல்லை…
நீயில்லை
அந்த யாரோ எனை
அழைக்கும் போதெல்லாம்….
உன்குரலாய்
உன் கெஞ்சல்களாய்…
மறந்துவிட நினைக்கும்
உன் ஞாபகங்களை
மறுபடியும் தூசிதட்டி
தந்துவிட்டதாய்…
ஒரு மயக்கம்…
ஒரு தடம் மாற்றம்…
சிறு சலனம்…
எல்லாம் ஒன்றாய்…
என்னை மன்னிப்பாயா…

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..