Wednesday, April 2, 2014

நட்சத்திரமும் அவளும்


அவள் வீட்டு வானத்தில் ஓரு
ஒற்றை நட்சத்திரம்..
புதிதாய்…
இப்போதெல்லாம்.. அதனைப்பார்க்காவிட்டாலோ
பேசாவிட்டாலோ… அவளுக்கு
தூக்கம் வருவதேயில்லை…
நட்சத்திரத்தினுடனான பந்தம்
பிரிக்க முடியாததாகிவிட்டது
அவளைப் பார்த்திடவே
நட்சத்திரமும் அவள் வீட்டு வான் வரும்
அவள் இருக்கும் வரைக்கும் தான் அதுவும் இருக்கும்
அவள் உறங்கப் போகையில் அதுவும் போய்விடும்
அவள் பேசும் வார்த்தைகள் அதற்கு புரியும்
நட்சத்திரத்தின் மொழிகளும் அவளுக்கு;தான் புரியும்
பைத்தியக்காரத்தனம் என்பர் பலர்…
சிறு பி;ள்ளை தனம் என்பர் சிலர்
அவளுக்கு எது பற்றியும் கவலையேயில்லை
இரவு..
நட்சத்திரம் …
நி~ப்பதம்..
அவள்…
அவளின் அழகிய உலகம் இதுதான்…
ஆதரவின்றி ஆதரவு தேடவில்லை
நட்சத்திரத்திடம்;
ஆயிரம் உறவுகள்..
அவளை சூழ அன்பு மழை பொழியும்
அவளும் தான்…
ஆனாலும் இந்த நட்சத்திரத்தில்
அலாதிப்பிரியம்..
இவளுக்காகவே காத்திருக்கும்
அந்த ஒற்றை நட்சத்திரம்…
கண்சிமிட்டும் போதெல்லாம்
மெய்மறந்து போகின்றாள்…
பிறர் புரியமுடியா அதன் பாi~களை
மொழி பெயர்தது  கொள்கிறாள்…
விடுங்கள் அவளை..
நட்சத்திரத்துடன் பேசுவதை யாரும் தடுக்காதீர்கள்
அவளுக்கா இல்லாவிட்டாலும்…
ஒற்றையாய் இருக்கும் அந்த நட்சத்திரத்திற்காக..




மழையும் சிறுமியும்


மேகத்தில் இருந்து வீழ்ந்ததொருதுளி
மேனிதொட்டி உரசி சென்றது
மேலே பார்க்கையில் பலதுளி தெறித்தது
மழையாய் மண்ணில் சட சடத்ததது

மரங்கள் நிறைவாய் தலையத்தன
மனிதர் முகமும் சிரித்துக்கொண்டது
சிப்பிகள் மெதுவாய் திறந்து கொண்டன
மழை துளியுண்டு மறுபடி மூடிக் கொண்டன.
மகிழ்ச்சி மழைக்கு…
ஆனந்தமாடி அரவணைத்தது
மரங்களின் தூசுக்கள் வழித்தே துடைத்தது
மனங்களின் கவலையும் மறந்திட செய்தது
வீதிகள் எங்கும் வெகுவாய் ஒடி
தேடித்தேடி எங்கெங்கோ சென்றது…
கையில் ஏந்தும் தையல்களயும் முகத்தில் ஏந்தும்
சின்னஞ் சிறுசுகளையும்…
எண்ணி எண்ணியே மழையும் பெய்தது

கால் நனைப்பதும்
கப்பல் விடுவதும்…
மழையைய் கண்டால் தானே வந்திடும்
மழையும் மகிழ்ந்திற்று…

என்ன ஆச்சரியம்..
ஆங்கோர் சிறுமி…
வீடு முழுக்க வெள்ளம் நிரம்ப
மூன்றே காலில் நின்ற மேசையின் கீழே
தன்னுடல் நனைவதையும் பொருட்படுத்தாது
செல்ல நாய்க்குட்டியுடன் ஒதுங்கியிருந்தாள்…
புத்தகங்கள் எல்லாம் கப்பலாய் மிதக்க- அவள்
கண்ணீரும் மழையும் இரண்டாய் கலந்தன…
மழை அழுதது சோ வென…ஒருகணம்
சட்டென நின்றது…
சிறுமி மகிழ்ந்தாள்
கையை நீட்டி பாத்த்தன் பின்னர்…
நாய்க்குட்டி அணைத்துவெளியே வந்தாள்

மழைவருமா என்று வானம் பார்த்தாள்
அது வரவில்லை… மகிழ்ந்தாள்
மறுநாள்…
அதற்கு அடுத்தநாள்…
அதன் பின்பு …
ம்…மழை வரவேயில்லை…
மழை சந்தோசப்படுத்தி சென்றவை யெல்லாம்
இப்போது அதை திட்ட தொடங்கிவிட்டன…

சிறுமி மட்டும் வான்னோக்கி வணங்கினாள்
“மழையே இன்றைக்கு வந்திடாதே”
வானம் தெரியும் என்குடிசை வீடாகட்டும்
அப்போது அழைக்கின்றேன்..
அழகாய் வந்து விடு’

சிறுமியின் மெல்லிய பிரார்த்தனையில்
மழையும் மனமிரங்கி கொண்டது
வருந்தி யார் அழைத்தும் அது வரவேயில்லை

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..