Thursday, August 7, 2014

எல்லாம் நாளை சரியாகிவிடும்…

எல்லாம் நாளை சரியாகிவிடும்…
இன்று தீர்க்க முடியாது என நீ நினைத்து கொண்டிருக்கும்
பிரச்சினைகள்…
குழப்பம் தருகின்ற வினாக்கள்..
முடிக்கப்படாத வேலைகள்…
சீர் செய்யப்படாமல்
இருக்கின்ற இந்த பாதைகள்…
உன் காலின் காயங்கள் எல்லாம் நாளை சரியாகிவிடும்

புரட்டிப்போடப்பட்டிருக்கும் புத்தக அலுமாரி
கலைந்துகிடக்கும் படிக்கின்ற மேசை
அடிக்கடி காணாமல் போய்…
கரைச்சல் தருகின்ற மின்சாரம்…
துக்கம் தருகின்ற …
துவைக்க வேண்டிய ஆடைகள்
எல்லாம் நாளை சரியாகிவிடும்..

அடிக்கடி அலறிக் கொண்டிருக்கின்ற
தொலைபேசி சத்தங்கள்…
சத்தமின்றி நின்றுவிட்ட எயார் கண்டி~ன்
அலுவலக டென்ஸன்கள்
எரிச்சலூட்டிப்போகும் யாரோ ஒருவர்
வார்த்தைகள்
எல்லாம்…எல்லாமே
நாளை சரியாகிவிடும்

காயப்படுத்தல்….



எப்போதும் யாரையாவது காயப்படுத்தி கொண்டே இருக்கின்றோம்..
ஒரு முறை…
இரண்டாவது முறை…
அதற்கு மேலும் என காயப்படுத்தல்கள் தொடரத்தான் செய்கின்றன…
எமக்கனானவர்களை…
எமது நேசிப்புக்குரியவர்களை…
எம்மில் அக்கறை கொண்டவர்களை
எமக்கு தெரிந்தவர்களை மட்டும்தான் எப்போதும் காணப்படுத்துகின்றோம்…

கத்தியின்றிய …
இரத்தம் சிந்தாத காயப்படுத்தல்கள்…
கண்ணீர் கண்டாலும் விடாத காயப்படுத்தல்கள்…
எப்பவும் ..
எமக்கு பிடித்தாமவர்களை நாம் காயப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்..

ஒரு கோபப்பார்வையால்  காயப்படுத்துகின்றோம்…
அலட்சியப் பார்வையாலும் காயப்படுத்துகின்றோம்…
பாராமுகத்தாலும் காயப்படுத்துகின்றோம்..
மௌனங்களால்..காயப்படுத்துகின்றோம்
வார்த்தைகளாலும் காயப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்…

சொல்வதை கேளாமல் காயப்படுத்துகின்றோம்
கேட்டதையும் செய்யாமல் காயப்படுத்துகின்றோம்..ஒருபோதும்
பேசாமல் காயப்படுத்துகின்றோம்…
பேசிப்பேசியும் காணப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்க பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்
வலிக்கும் என்று தெரிந்தும்
மறப்பதில்லை …காயப்படுத்தல்களை….
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்

அவளின் மரணம்….


அவள்போய்விட்டாள்…
இந்த ஊரைவிட்டு உலகை விட்டே அவள் போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமாக இருந்தவள் அவள்தான்
அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
இன்றுடன் முடியப்போகின்றது..

வாரத்தில் ஒருமுறை எனினும்
மாதத்தில் இருமுறையாவது
அவளைப்பார்த்திடத்தான்
அங்கு வருவதுண்டு…
எங்களுக்கும்… அவர்களுக்குமான
உறவினை…
நட்பினை..
அவள்தான் சொல்வாள்
அவள்தான் வளர்த்தாள்
இன்று அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவு
இன்றுடன் முடியப்போகின்றது…

இனிமேல் இங்கு ஒருபோதும் நாங்கள் வரப்போவதில்லை
அவள் இல்லாத இடத்தில்
வருவதும் வெறுப்பாகும்…
எங்காவது இவர்களை சந்திக்க நேரிடும்…
ஒரு புன்னகை…
சிறு நலன் விசாரிப்பு…
அத்துடன் முடிந்துவிடும் எங்களின் உறவும்..

அவள்போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமானவள்
இன்று இறந்துவிட்டாள்
இன்றுடன் எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
முடிந்துவிடப்போகின்றது…

அவன் அவனாக இருத்தலால்………


விதி என்ற போர்வைக்குள் முடங்கிவிட
அவன் எப்போதும் தயாராக இருந்ததில்லை
கடவுளர் பெயர் சொல்லி ஒளிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை…
தன்னை நியாயப்படுத்தி கொள்வதற்காக வார்த்தைகளை
கோர்த்திடவும் அவனுக்கு பிடிப்பதில்லை
அவன் அவனாக மட்டுமே இருக்க விரும்பினான்
அதனால்தான்..
அவனையாருக்குமே பிடிக்காமல் போயிற்று….


இசைமாறிய பயணம்…2




இறைவனின் வீதியுலா..
முன்னே மேள நாதஸ்வரங்கள்…
முழங்கின…
“கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…”
சாமியும் மாறிப்போயிருந்தார்
சினிமாவிற்குள்…

இசைமாறிய பயணம்…1



வெளிநாட்டில் பிள்ளைகள்
தந்தையின் மரண ஊர்வலம்
“பாண்ட்” வாத்தியங்கள்..
முழங்கி கொண்டிருந்தன…
இச்சு.. இச்சு… இச்சுகொடு…
“பொடி”மட்டும்தான்; அமைதியாய்  கிடந்தது…
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..