Thursday, August 7, 2014

அவளின் மரணம்….


அவள்போய்விட்டாள்…
இந்த ஊரைவிட்டு உலகை விட்டே அவள் போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமாக இருந்தவள் அவள்தான்
அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
இன்றுடன் முடியப்போகின்றது..

வாரத்தில் ஒருமுறை எனினும்
மாதத்தில் இருமுறையாவது
அவளைப்பார்த்திடத்தான்
அங்கு வருவதுண்டு…
எங்களுக்கும்… அவர்களுக்குமான
உறவினை…
நட்பினை..
அவள்தான் சொல்வாள்
அவள்தான் வளர்த்தாள்
இன்று அவள் போய்விட்டாள்…
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவு
இன்றுடன் முடியப்போகின்றது…

இனிமேல் இங்கு ஒருபோதும் நாங்கள் வரப்போவதில்லை
அவள் இல்லாத இடத்தில்
வருவதும் வெறுப்பாகும்…
எங்காவது இவர்களை சந்திக்க நேரிடும்…
ஒரு புன்னகை…
சிறு நலன் விசாரிப்பு…
அத்துடன் முடிந்துவிடும் எங்களின் உறவும்..

அவள்போய்விட்டாள்
எங்களுக்கும் அவர்களுக்குமான உறவின் பாலமானவள்
இன்று இறந்துவிட்டாள்
இன்றுடன் எங்களுக்கும் அவர்களுக்குமான உறவும்
முடிந்துவிடப்போகின்றது…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..