Thursday, August 7, 2014

எல்லாம் நாளை சரியாகிவிடும்…

எல்லாம் நாளை சரியாகிவிடும்…
இன்று தீர்க்க முடியாது என நீ நினைத்து கொண்டிருக்கும்
பிரச்சினைகள்…
குழப்பம் தருகின்ற வினாக்கள்..
முடிக்கப்படாத வேலைகள்…
சீர் செய்யப்படாமல்
இருக்கின்ற இந்த பாதைகள்…
உன் காலின் காயங்கள் எல்லாம் நாளை சரியாகிவிடும்

புரட்டிப்போடப்பட்டிருக்கும் புத்தக அலுமாரி
கலைந்துகிடக்கும் படிக்கின்ற மேசை
அடிக்கடி காணாமல் போய்…
கரைச்சல் தருகின்ற மின்சாரம்…
துக்கம் தருகின்ற …
துவைக்க வேண்டிய ஆடைகள்
எல்லாம் நாளை சரியாகிவிடும்..

அடிக்கடி அலறிக் கொண்டிருக்கின்ற
தொலைபேசி சத்தங்கள்…
சத்தமின்றி நின்றுவிட்ட எயார் கண்டி~ன்
அலுவலக டென்ஸன்கள்
எரிச்சலூட்டிப்போகும் யாரோ ஒருவர்
வார்த்தைகள்
எல்லாம்…எல்லாமே
நாளை சரியாகிவிடும்

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..