Thursday, September 4, 2008

தூக்கம்

அப்போதெல்லாம்....என்னை
உனக்கு நிரம்பவும் பிடிக்கும்....எப்போதும்
என் கூடவே இருப்பாய்...
பொம்பிளப் பிள்ளை என்ன பழக்கம்....
அம்மாவிடம் கூட எத்தனை முறை
எனை ஏச்சு வாங்க வைத்திருப்பாய்...
வகுப்பறையில்....
பேருந்தின் ஜன்னலோரப்...
பயணத்தில்....என்று
எப்பவுமே எனை அணைத்திருப்பாய்....
யாரைப்பற்றியும்....
உனக்கு கவலையே இல்லை....
அப்போதெல்லாம் உனை நான் நிரம்பவும்
வெறுத்தது என்னவோ
உண்மைதான்.....அதனால் தான்
எனைவிட்டு தொலை தூரம் சென்றாயா...?
என்னினிய தூக்கமே.....
வருந்தி அழைக்கின்றேன்....
மறுபடியும் என்னிடம் வந்துவிடு......

பாவிகள்


பணம் இல்லாமல்
தன வாழ்வு சிதறடிக்கப்பட்டதாக புலம்புகிறாள்..
அங்கொருத்தி...
பணம் தான் தன்னுடைய வாழ்க்கையை
சிதைத்து விட்டதாக புலம்புகிறாள்
இங்கொருத்தி...
மொத்தத்தில்
பணமும்...
பெண்ணும்...
பாவிகள்தாம்.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..