Thursday, September 11, 2008

நினைவுகள்

அழகான பொழுதுகள்...
உன்னோடு முடிந்து விட்டன...
அன்பான பார்வைகளும்...
வார்த்தைகளும்கூட....
உன்னுடனே முடிந்துவிட்டன...
உனக்காக வாழ்ந்த உன்னை விட...
எனக்காக வாழ்ந்த நீயே அதிகம்...
உனக்காக நான் வாழ்வதில்...
தப்பேது....
உலகமும் மாறலாம்...
உருவங்களும் மாறலாம்...
உன் நினைவுகளை எப்படி மாற்ற முடியும்...
நீ எங்கே என்று கேட்பவர்களிடம் எல்லாம்...
நீ இல்லை என்பதை எப்படி சொல்வேன்....
நான்தான்.. இறந்தும்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
நீயோ மரணத்தின் பின்பும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
என்னுள்...
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..