Wednesday, April 23, 2014

வீதி விபத்து

வீதி விபத்து இருவர் பலி
இன்றைய செய்தியில் இதைப்படித்தேன்…
நேற்றைய செய்தியிலும்
இப்படித்தான் படித்தேன்…
நேற்றைக்கு முதல் நாளும்...
அதற்கு முதல் நாளும் கூட
இதே செய்தியை படித்தேன்
சென்ற கிழமை..
அதற்கு முதற் கிழமை..
போன மாதம்..
என ஒவ்வொரு நாளும்
இதே செய்தியை படித்தேன்
படிக்கிறேன்..
ஆனால்..
நான்கு வருடங்களுக்கு முன்னர்
இபபடிப்பட்ட செய்தியை படித்ததேயில்லை…

பேசும் கிளி பொம்மை






சின்ன வயது பிறந்தநாள் ஒன்றில்
அபபா வாங்கி தந்த அழகிய பொம்மை..
“பேசும் கிளிப் பொம்மை”
பச்சை வண்ண மேனி
இச்சை கொள்ள செய்யும்
இளஞ் சிவப்பு உதடுகள்
கொள்ளை அழகு
எனக்கே எனக்காக…
பேசும் கிளி…
அம்மா என்றழைத்தால் அதுவும் அழைக்கும்+
அப்பா என்றால்
அதுவும் அப்பா சொல்லும்
என் பெயர் சொன்னால் மீண்டும் சொல்லும்
எப்போதும் சொல்லி கேட்பேன் என் பெயர்..

பசிதூக்கம் மறந்து பச்சை கிளியே என் சொந்தமானது
பாய்ந்து தங்கை பறித்து செல்லாள்..
தா..”வென தம்பியும் விழுந்து அழுவான்
தரவே தரமாட்டேன்
அம்மாவின் கெஞ்சலக்காய் அரை நொடி கொடுத்து
படக்கென பிடுங்கி பத்திரமாய் வைப்பேன்..
பள்ளிக்கு போனபின்னால்… தங்கை எடுப்பாள்
தலை திருப்பி வைப்பாள்…
வேண்டாம் தொல்லையென…
என்னுள் எண்ணி…
கதிரை வைத்து மேவை மேல் ஏறி
பரணின் ஓரம் மெல்ல வைத்தேன்..
கிளி பறந்தது  என்று சொல்லி
பேசாதிருந்தேன் …
அவ்வப்போ நான் மட்டும் பரணில் ஏறி பார்த்தது இறங்கினேன்
சில நாள் செல்ல மெல்ல கிளியும் மறந்து போயிற்று..

காலம் மெரல்ல நகர்ந்து நெல்ல
ஊர்விட ;டோடிய ஓர் நாள் பொழுதில்..
கிளியும் சுத்தமாய் மறந்து போனது எல்லாம் போலவே..

பதினைந்து வருட இடைவெளி பின்னர்
அதே வீடு…
அதே நான்…யாருமற்ற தன்மையின் பிடியில்…
சுத்தப்படுத்த ஏறிய பரணில்…
எனது கிளி… அதே பேசும் கிளி…
பச்சை வர்ணம் மெல்ல கரைந்திருந்தது..
உதடுகள் இரண்டும் தனியே கிடந்தன…
பேமுடியவில்லை வாய்திறந்து அதனால்..
மெல்ல எடுத்து அழுத்தி துடைத்து
உதடுகள் ஒட்டி பத்திரப்படுத்தினேன்..
இப்பவும்…
அவ்வப்போ அது சொல்லும் அழகிய நினைவுகள்…
என் கிளி..
அப்பா வாங்கித் தந்த அழகிய கிளி..

Monday, April 7, 2014

அவளது கவிதை புத்தகம்



 அவளது கவிதைப் புத்தகம்
நெருப்பு பிடித்துவிட்டது
சாம்பலாகியும் விட்டது…
“நெருப்பென்றெழுதினால் என்ன சுட்டு விடுமா”
என்றே நினைத்தாள்
நெருப்பை எழுதினாள் எரிந்து போய்விட்டது
அவளது புத்தகம் சாம்பலாகி விட்டது…
இது எப்படி…
மழை … வெள்ளம்…
தண்ணீர்… கண்ணீர் … என்றெல்லாம் அதில் எழுதி வைத்திருந்தாளே
என்றாலும் எவற்றாலும் 
அந்த நெருப்பினை அணைக்கமுடியவில்லை..
அவளது புத்தகம்
எரிந்து சாம்பலாகி விட்டது.

Wednesday, April 2, 2014

நட்சத்திரமும் அவளும்


அவள் வீட்டு வானத்தில் ஓரு
ஒற்றை நட்சத்திரம்..
புதிதாய்…
இப்போதெல்லாம்.. அதனைப்பார்க்காவிட்டாலோ
பேசாவிட்டாலோ… அவளுக்கு
தூக்கம் வருவதேயில்லை…
நட்சத்திரத்தினுடனான பந்தம்
பிரிக்க முடியாததாகிவிட்டது
அவளைப் பார்த்திடவே
நட்சத்திரமும் அவள் வீட்டு வான் வரும்
அவள் இருக்கும் வரைக்கும் தான் அதுவும் இருக்கும்
அவள் உறங்கப் போகையில் அதுவும் போய்விடும்
அவள் பேசும் வார்த்தைகள் அதற்கு புரியும்
நட்சத்திரத்தின் மொழிகளும் அவளுக்கு;தான் புரியும்
பைத்தியக்காரத்தனம் என்பர் பலர்…
சிறு பி;ள்ளை தனம் என்பர் சிலர்
அவளுக்கு எது பற்றியும் கவலையேயில்லை
இரவு..
நட்சத்திரம் …
நி~ப்பதம்..
அவள்…
அவளின் அழகிய உலகம் இதுதான்…
ஆதரவின்றி ஆதரவு தேடவில்லை
நட்சத்திரத்திடம்;
ஆயிரம் உறவுகள்..
அவளை சூழ அன்பு மழை பொழியும்
அவளும் தான்…
ஆனாலும் இந்த நட்சத்திரத்தில்
அலாதிப்பிரியம்..
இவளுக்காகவே காத்திருக்கும்
அந்த ஒற்றை நட்சத்திரம்…
கண்சிமிட்டும் போதெல்லாம்
மெய்மறந்து போகின்றாள்…
பிறர் புரியமுடியா அதன் பாi~களை
மொழி பெயர்தது  கொள்கிறாள்…
விடுங்கள் அவளை..
நட்சத்திரத்துடன் பேசுவதை யாரும் தடுக்காதீர்கள்
அவளுக்கா இல்லாவிட்டாலும்…
ஒற்றையாய் இருக்கும் அந்த நட்சத்திரத்திற்காக..




மழையும் சிறுமியும்


மேகத்தில் இருந்து வீழ்ந்ததொருதுளி
மேனிதொட்டி உரசி சென்றது
மேலே பார்க்கையில் பலதுளி தெறித்தது
மழையாய் மண்ணில் சட சடத்ததது

மரங்கள் நிறைவாய் தலையத்தன
மனிதர் முகமும் சிரித்துக்கொண்டது
சிப்பிகள் மெதுவாய் திறந்து கொண்டன
மழை துளியுண்டு மறுபடி மூடிக் கொண்டன.
மகிழ்ச்சி மழைக்கு…
ஆனந்தமாடி அரவணைத்தது
மரங்களின் தூசுக்கள் வழித்தே துடைத்தது
மனங்களின் கவலையும் மறந்திட செய்தது
வீதிகள் எங்கும் வெகுவாய் ஒடி
தேடித்தேடி எங்கெங்கோ சென்றது…
கையில் ஏந்தும் தையல்களயும் முகத்தில் ஏந்தும்
சின்னஞ் சிறுசுகளையும்…
எண்ணி எண்ணியே மழையும் பெய்தது

கால் நனைப்பதும்
கப்பல் விடுவதும்…
மழையைய் கண்டால் தானே வந்திடும்
மழையும் மகிழ்ந்திற்று…

என்ன ஆச்சரியம்..
ஆங்கோர் சிறுமி…
வீடு முழுக்க வெள்ளம் நிரம்ப
மூன்றே காலில் நின்ற மேசையின் கீழே
தன்னுடல் நனைவதையும் பொருட்படுத்தாது
செல்ல நாய்க்குட்டியுடன் ஒதுங்கியிருந்தாள்…
புத்தகங்கள் எல்லாம் கப்பலாய் மிதக்க- அவள்
கண்ணீரும் மழையும் இரண்டாய் கலந்தன…
மழை அழுதது சோ வென…ஒருகணம்
சட்டென நின்றது…
சிறுமி மகிழ்ந்தாள்
கையை நீட்டி பாத்த்தன் பின்னர்…
நாய்க்குட்டி அணைத்துவெளியே வந்தாள்

மழைவருமா என்று வானம் பார்த்தாள்
அது வரவில்லை… மகிழ்ந்தாள்
மறுநாள்…
அதற்கு அடுத்தநாள்…
அதன் பின்பு …
ம்…மழை வரவேயில்லை…
மழை சந்தோசப்படுத்தி சென்றவை யெல்லாம்
இப்போது அதை திட்ட தொடங்கிவிட்டன…

சிறுமி மட்டும் வான்னோக்கி வணங்கினாள்
“மழையே இன்றைக்கு வந்திடாதே”
வானம் தெரியும் என்குடிசை வீடாகட்டும்
அப்போது அழைக்கின்றேன்..
அழகாய் வந்து விடு’

சிறுமியின் மெல்லிய பிரார்த்தனையில்
மழையும் மனமிரங்கி கொண்டது
வருந்தி யார் அழைத்தும் அது வரவேயில்லை

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..