Monday, April 7, 2014

அவளது கவிதை புத்தகம்



 அவளது கவிதைப் புத்தகம்
நெருப்பு பிடித்துவிட்டது
சாம்பலாகியும் விட்டது…
“நெருப்பென்றெழுதினால் என்ன சுட்டு விடுமா”
என்றே நினைத்தாள்
நெருப்பை எழுதினாள் எரிந்து போய்விட்டது
அவளது புத்தகம் சாம்பலாகி விட்டது…
இது எப்படி…
மழை … வெள்ளம்…
தண்ணீர்… கண்ணீர் … என்றெல்லாம் அதில் எழுதி வைத்திருந்தாளே
என்றாலும் எவற்றாலும் 
அந்த நெருப்பினை அணைக்கமுடியவில்லை..
அவளது புத்தகம்
எரிந்து சாம்பலாகி விட்டது.

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..