Wednesday, April 2, 2014

நட்சத்திரமும் அவளும்


அவள் வீட்டு வானத்தில் ஓரு
ஒற்றை நட்சத்திரம்..
புதிதாய்…
இப்போதெல்லாம்.. அதனைப்பார்க்காவிட்டாலோ
பேசாவிட்டாலோ… அவளுக்கு
தூக்கம் வருவதேயில்லை…
நட்சத்திரத்தினுடனான பந்தம்
பிரிக்க முடியாததாகிவிட்டது
அவளைப் பார்த்திடவே
நட்சத்திரமும் அவள் வீட்டு வான் வரும்
அவள் இருக்கும் வரைக்கும் தான் அதுவும் இருக்கும்
அவள் உறங்கப் போகையில் அதுவும் போய்விடும்
அவள் பேசும் வார்த்தைகள் அதற்கு புரியும்
நட்சத்திரத்தின் மொழிகளும் அவளுக்கு;தான் புரியும்
பைத்தியக்காரத்தனம் என்பர் பலர்…
சிறு பி;ள்ளை தனம் என்பர் சிலர்
அவளுக்கு எது பற்றியும் கவலையேயில்லை
இரவு..
நட்சத்திரம் …
நி~ப்பதம்..
அவள்…
அவளின் அழகிய உலகம் இதுதான்…
ஆதரவின்றி ஆதரவு தேடவில்லை
நட்சத்திரத்திடம்;
ஆயிரம் உறவுகள்..
அவளை சூழ அன்பு மழை பொழியும்
அவளும் தான்…
ஆனாலும் இந்த நட்சத்திரத்தில்
அலாதிப்பிரியம்..
இவளுக்காகவே காத்திருக்கும்
அந்த ஒற்றை நட்சத்திரம்…
கண்சிமிட்டும் போதெல்லாம்
மெய்மறந்து போகின்றாள்…
பிறர் புரியமுடியா அதன் பாi~களை
மொழி பெயர்தது  கொள்கிறாள்…
விடுங்கள் அவளை..
நட்சத்திரத்துடன் பேசுவதை யாரும் தடுக்காதீர்கள்
அவளுக்கா இல்லாவிட்டாலும்…
ஒற்றையாய் இருக்கும் அந்த நட்சத்திரத்திற்காக..




No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..