Saturday, August 30, 2008

இடைவெளி


உன்னை சந்திக்கின்ற அதிசயமான
பொழுதுகளில் எல்லாம்...
இடைவெளி விட்டுத்தான் இருப்பதுண்டு
நீ என்னை தொட்டு விடுவாய் என்ற அச்சமல்ல....
நம்மிடையே காதல்இருக்கட்டும்...
அதற்காகத்தான்...

Thursday, August 28, 2008

கடனாளி

கடவுளுக்கும் எனக்கும்
மண்ணில் கனக்க
கணக்கு வழக்கு…
அதனால்தான் அவன்….
மண்ணிற்கும் வருவதில்லை...என்
கண்ணிலும் படுவதில்லை

Wednesday, August 27, 2008

மொழி

கோபமாய் யாரையும்
ஏசியது கூட இல்லை
நான்...
என் மொழியை மிக நேசிப்பவள்.

முரண்




அவனும் நானும்..
எப்பவும் சண்டை போடுவோம்...
எனக்கும் அவனைப் பிடிப்பதில்லை...
அவனுக்கும் என்னைப் பிடிப்பதேயில்லை....
கதைக்காத பொழுதெல்லாம் அம்மாதான்..
கைபிடித்து விடுவாள்....
'கண்ணா... இவளையும் பள்ளியில
விட்டுவிடு.... .".
அம்மாதான் ஏற்றிவிட்டாள்
முதன் முதலாக.......
தைப்பொங்கலா....;
'கண்ணாவை கூப்பிடு....!
வருடப்பிறப்பா கண்ணாவை கூப்பிடு...
தீபாவளியா ....
'கண்ணா எங்கே...?
அம்மா தான் கேட்பாள்....
நான்தான் ஓடிப்போய் கூட்டி வருவேன்....
ஒருநாள்....
அப்பா வாங்கிவந்த
சாக்லெற்றை...
முழுவதுமாய் நானே சாப்பிட்டு விட..
;..'கண்ணாக்கு கொடு;க்கவில்லையா...".
அம்மாதான் ஏசினாள்....
'இந்தா இதைக் கொடு...".
என்று
வேறு சாக்லெட் தந்தவளும் அம்மாதான்...

நீண்டநாட்களின் பின் ஒருநாள்…
புதுச்சட்டையுடன்...
பள்ளிக்கு வெளிக்கிட்டு பாத்திருந்தேன்....
கண்ணனுக்காக...
வந்தான் சிரித்தபடி...
அம்மாவும் வந்தாள்
;..'கண்ணா நீ போ இனிமேல்
அவள் அண்ணாவுடன் வருவாள்... .".
அம்மாதான் சொன்னாள்....

அவனுக்கும் புரியவில்லை ....
எனக்கும் புரியவில்லை...

Tuesday, August 26, 2008


விடிகின்ற ஒவ்வொரு பொழுதும்
உன்னையே நினைத்துக் கொள்வேன்...அதற்கு
காரணம்...
நீ என்பதால்..
உன்னைப் பார்க்க விரும்பும் போதெல்லாம்...
உன்னோடு பேச விரும்பும் போதெல்லாம்...
பூக்களைத்தான் பார்க்கிறேன்...
அவற்றோடு தான் பேசுகிறேன்...
மௌனமாய் தலைசாய்த்து கேட்கும்...தாலாட்டும்
தாயாக...
அவையும் உன்னைப்போலத்தான்...

Monday, August 25, 2008

திருப்தி


உன் மௌனம்...
உன்வார்த்தை...
உன் புன்னகை...
உன் அன்பு...
எனக்கு கிடைத்த பெறுவதற்கரிய சொத்து...
இது போதும்...
என் வாழ்நாள் முழுதும்...

ஒற்றுமை


என் செல்போனிற்கும்
உனக்கும்
எப்பவுமே ஒரு ஒற்றுமை...
எப்பவுமே சிணுங்கிய படிதான்...

என்னிடம் இல்லை

பெண்ணே..!
என்னை எல்லோரும்...
இதயம்இல்லாதவன்...
என்றுதான் சொல்கிறார்கள்...
உண்மைதான்...
என்னிதயம் உன்னிடம் இருப்பது
அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது...

படிப்பு

புத்தகத்தை புரட்டுகிறேன்....
படிக்க முடியவில்லை...
தோன்றும் எழுத்தெல்லாம்...
உன் முகத்தின் சாயல்களாய்...
உன் முகத்தைப் பார்ப்பதற்காய்...
கணந்தோறும் வருடுகிறேன்
புத்தகத்தின் பக்கங்களை...

Saturday, August 23, 2008

நேற்றுச் செய்தவை...
இன்று செய்பவை...
நாளை செய்யவுள்ளவை..
எல்லாமே... எல்லாமே எனக்கு மறந்து போனது..
நீ மட்டுமே என் நினைவில்
நிற்பதால்....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..