Thursday, January 16, 2014

கடவுளும் குழந்தையும்



யாரும் இல்லாத இந்த பிரபஞ்சத்தில்
தனித்துவிடப்பட்டேன்
காற்றாய் மிதக்கின்றேன்
கால்களையும் காணவில்லை
நேற்றுவரை சோறூட்டிய என் அம்மா எங்கே..
தோள்மீது தூக்கி திரிந்த என் அப்பா எங்கே..
யாரும் இல்லாமல்
நான் மட்டும்…
கடவுளுக்கும் சாத்தானுகக்கும்
இடையே நடந்த யுத்ததில்
கடவுளும் தோற்று போனாரா….
மனமுருகி வேண்டின் மனமிரங்கி வருவான்
கடவுள்…
வரமொன்று நாம் வேண்டின் தருவான்
பறந்து வந்து…
பாட்டி சொல்லி தந்திருந்தாள் இப்படித்தான்
பாலுக்கு அழுத பிள்ளைக்கு பால் கொடுத்தான்- தாயிழந்த
பன்றி குட்டிகளுக்கும் தயாயிருந்தான்
பாலர் வகுப்பிலே..இப்படித்தான்
அறிந்திருந்தேன் கடவுளை
கடவுள் நல்லவர்…
கண்மூடி வேண்டினேன்
காப்பாற்ற யாரும் இல்லை…
பறந்து வருவான் கடவுள் என
பார்த்திருந்தேன் வானை நோக்கி…
கடவுள் வரவேயில்லை…
துப்பாக்கி சத்தங்களிடையேயும்
தூங்காமல் பார்த்திருந்தேன் கடவுளை
கடவுள் வரவேயில்லை

 ஓரிரவு
 சட்டென்ற ஒரு ஒளிக்கிற்று வானில் இருந்து
 ஓ…கடவுளா…
 இல்லை…
 கடவுள் இல்லை
 காதை செவிடாக்கும் சத்மொன்று…நான்
 சாத்தான் கைகைகளில்
 கடவுளர் சொற்கள் எல்லாம் மறந்து
 சாத்தன் சொற்களே…
 இப்பபோதெல்லாம்
 காதில் இரைகின்றன

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..