Friday, September 12, 2008

அளவையும் நானும்


அன்றொருநாள்....
அளவை படித்தால்...
ஆகலாம்...நல்ல தொழில் என்று...
நில அளவை பிரிவுக்குள்...
தள்ளி விட்டார்...
என்னினிய வாத்தியார்....
திசைகள்... தொடங்கி....
தியோடைலைற்றும்....
முடிச்சாச்சு....
புவிச்சுற்றுப் போல தலை...
சுற்றத் தொடங்கிற்று...
ஜயையோ... வேண்டாமென....
ஒடிவர நினைக்கையிலே...
ஆண்டவனாய் எனை அழைத்து...
அக்கரையில் விட்டுவிட்டார்...
"அப்பாடா"....என்று பெருமூச்சு விட்டு...
ஆண்டுகள் பல...
கடந்த நிலையில்....
இப்போது....
மறுபடியும் அளவையிலே....
திசைகளும்தான்....
தியோடலைற்றும் தான்....
அப்பப்ப...தலைசுற்றலும்தான்....
ஆனாலும்....இன்னும்...
ஓட நினைக்கவில்லை....அக்
காலம் வெகு தூரமும் இல்லை......

மரணத்தின் பின்……..


நாளை நான் இறந்து விடுவேன்.....
முற்றத்து மல்லிகையும் வேலியோரத்து.....
செவ்வரத்தையும்....
வழமை போல் பூக்கதான் போகின்றன...
ஆனாலும்...நான் அறிய மாட்டேன்....
மரண ஓலம்....
வீட்டை நிறைக்கும்....
'பொடி எப்ப எடுப்பினம்" அன்புடையோரின்
அக்கறையான விசாரிப்புகளும்.....
அடிக்கடி நடக்கும்.....
இதுவும் நான் அறிய மாட்டேன்.....
மாமரத்தின் உச்சியிலே கூடுகட்டி வாழும்
தூக்கணாம் குருவியும்....ஒரு கணம்
எட்டிப் பார்த்து செல்லும்......மறந்து விடும்...
உறவுகள் அழும்......
ஒன்று...இரண்டு....மூன்று....மாதங்கள்...
முழுசாய் ஓட....என் முகமும்...
மறந்து விடும்.....
கொஞ்சம்....கொஞ்சமாய்.....
சுவரில் சித்திரமாய்.....
என் படமும் ஏறிவிடும்.....
இவையும் நான் அறி;ய மாட்டேன்....
ஒரு வருடம் ஆகிவிட்டால்....
எல்லோரும் எனை மறந்திடுவர்.....என்
பெயர்கூட மறந்திடுவர்
ஆனாலும்....
எனக்காக....
எங்கோ ஒர் தொலை தூரத்தில்....
ஆத்மார்த்தமாய்….
இதயத்தின் வலியெல்லாம் ஒன்று சேர...
ஒரே ஒரு ஜீவன் மட்டும்....எப்பவும்
அழுது கெண்டிருக்கும்....
அது மட்டும் நான் அறிவேன்.....

கடிதம்


அன்போடு எனை வளர்த்த அன்னைக்கு
ஒரு கடிதம் எழுதவென மனம் துடிக்க
எடுத்தேன் ஒரு காகிதத்தை....
கொப்பியிலோ காகிதம் கையிலையோ பேனா....
சுகங்கள்... சுமைகள்....
துன்பங்கள்.. துயரங்கள்..
நீண்டநாள் பிரிவின்....
நினைவழியா நினைவுகள்...என
அடுக்கடுக்காய் பல நினைத்து....
சிவமயமும் இட்டாச்சு....
திகதியும் போட்டாச்சு...
அன்புள்ள அம்மா....என்று தொடங்கி...
அனைத்தும் தான் எழுதி...
இப்படிக்கு உங்கள் மகள்....
முடித்து கையெழுத்தும் வைச்சாச்சு....
மீண்டும்... மீண்டும் படித்து....
மனதில் திருப்தி வர...
நான்காக மடித்து...
"என்பலப்"தனிலும்
வைத்து விட்டேன்
அகம் மிக மகிழ்ந்தேன்...
என் அறியாமையை அறியாமலே...
கந்தசாமிப் புலவருக்கென கங்கையில்
விடுத்த ஓலையில்; கூட...
விபுலானந்தர் முகவரி
இட்டுத்தானே அனுப்பினார்...
அமரர் உலகில் இருக்கும்...என்
அன்னைக்கு....
ஆசையோடு நான் எழுதிய கடிதத்திற்கு...
எந்த முகவரியை இடுவது....
முகவரியோ தெரியாமல்....
ஒருவிதமும் புரியாமல்...
முட்டாள்தனமாய்....
எழுதிய கடிதமது...
பக்குவமாய் இன்றும்...
என்னிடமே.......

கடிதம்



அன்போடு எனை வளர்த்த அன்னைக்கு
ஒரு கடிதம்....
எழுதவென மனம் துடிக்க
எடுத்தேன் ஒரு காகிதத்தை....
கொப்பியிலோ காகிதம் கையிலையோ பேனா....
சுகங்கள்... சுமைகள்....
துன்பங்கள்.. துயரங்கள்..
நீண்டநாள் பிரிவின்....
நினைவழியா நினைவுகள்...என
அடுக்கடுக்காய் பல நினைத்து....
சிவமயமும் இட்டாச்சு....
திகதியும் போட்டாச்சு...
அன்புள்ள அம்மா....என்று தொடங்கி...
அனைத்தும் தான் எழுதி...
இப்படிக்கு உங்கள் மகள்....
முடித்து கையெழுத்தும் வைச்சாச்சு....
மீண்டும்... மீண்டும் படித்து....
மனதில் திருப்தி வர...
நான்காக மடித்து...
"என்பலப்"தனிலும்
வைத்து விட்டேன்
அகம் மிக மகிழ்ந்தேன்...
என் அறியாமையை அறியாமலே...
கந்தசாமிப் புலவருக்கென கங்கையில்
விடுத்த ஓலையில்; கூட...
விபுலானந்தர் முகவரி
இட்டுத்தானே அனுப்பினார்...
அமரர் உலகில் இருக்கும்...என்
அன்னைக்கு....
ஆசையோடு நான் எழுதிய கடிதத்திற்கு...
எந்த முகவரியை இடுவது....
முகவரியோ தெரியாமல்....
ஒருவிதமும் புரியாமல்...
முட்டாள்தனமாய்....
எழுதிய கடிதமது...
பக்குவமாய் இன்றும்...
என்னிடமே.......

விரோதம்


மௌனமே பாதுகாப்பு என்றிருந்தேன்....
அதுவே என் விரோதியாகும் வரை...
மெல்லப் பேசினேன்...
அது கூட என் விரோதியாகவே....
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..