Friday, September 12, 2008
அளவையும் நானும்
அன்றொருநாள்....
அளவை படித்தால்...
ஆகலாம்...நல்ல தொழில் என்று...
நில அளவை பிரிவுக்குள்...
தள்ளி விட்டார்...
என்னினிய வாத்தியார்....
திசைகள்... தொடங்கி....
தியோடைலைற்றும்....
முடிச்சாச்சு....
புவிச்சுற்றுப் போல தலை...
சுற்றத் தொடங்கிற்று...
ஜயையோ... வேண்டாமென....
ஒடிவர நினைக்கையிலே...
ஆண்டவனாய் எனை அழைத்து...
அக்கரையில் விட்டுவிட்டார்...
"அப்பாடா"....என்று பெருமூச்சு விட்டு...
ஆண்டுகள் பல...
கடந்த நிலையில்....
இப்போது....
மறுபடியும் அளவையிலே....
திசைகளும்தான்....
தியோடலைற்றும் தான்....
அப்பப்ப...தலைசுற்றலும்தான்....
ஆனாலும்....இன்னும்...
ஓட நினைக்கவில்லை....அக்
காலம் வெகு தூரமும் இல்லை......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment