Saturday, October 26, 2013

அம்மா இல்லாத முதல் தீபாவளி
















அம்மா இல்லாத முதல் தீபாவளி
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது
மறக்கவே முடியாத அம்மாவை போல- அதுவரை
சந்தோசங்களை மட்டுமே தந்து சென்ற தீபாவளி
முதன் முதலாய்   தீராத வலிதந்தது
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது

காலையில் எழுப்பிவிடும் அம்மா அன்று இல்லை
தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து
வேளையுடன் கோவிலுக்கு அழைத்து செல்வதற்கும்
அம்மா அன்று இல்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இனறும்

புத்தாடை அணிவித்து தலைசீவி பொட்டிட்டு
புதுமையாய் அழகு பார்க்கும் அம்மா இல்லை
விதவிதமாய் பலகாரம் விரும்பி சமைத்து
விருப்போடு பரிமாற அம்மா இருக்வில்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்

அதன் பின்னரான ஒவ்வொரு தீபாவளியிலும் அம்மா இல்லை
அதிகாலை குளியல்…
புத்தாடைபுனைவு….
ஆலையம் செல்லல்
அறுசுவை உணவு
எல்லாம் இப்போது மீண்டும் வந்தாலும்
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்
உலக்துக்கேயான ஓட்டுமொத்த வெறுமையும்
இப்போதும்
எங்கள் வீட்டில் இருக்கின்றது
அம்மா இல்லாமல்…

Monday, October 21, 2013

ஒருநாள் கனவு


கண்ணுக்கெட்டிய தூரம்
வரைக்கும்
மணல்திட்டு
வானம்…
இந்த மண்…
நான் தவிர அங்கு யாருமே இல்லை
ஒற்றையாய் ஒரு பறவை
அது கூட இல்லை
எப்படி நான் இங்கு வந்தேன்
எனக்கு தெரியவில்லை
என்னுடன் வந்தவர்களெல்லாம் எங்கே
அதுவும் எனக்கு தெரியவில்லை
எங்கே செல்கிறேன்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
மணலுள் புதைந்து..
முடியவில்லை
மூச்சிரைக்கின்றது…
தாகம்
தண்ணீரும் இல்லை
மெல்ல நடக்கின்றேன்
சட்டென
பின்னால் ஒரு நிழல்
யாரது…?
தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை
வெளிவரவில்லை
யாராயிருக்கும்
திருடனா…?
திருடுவதற்கு தான் என்னிடம் எதுவுமே இவ்லையே
காதில் இருந்த
கவரிங் தவிர
பேயா…
சீ… இருக்காது
சின்ன வயதில் கேட்ட
பேய்க் கதைகள் எல்லாம் அப்போதுதானா
ஞாபத்தில் வரவேண்டும்..
அப்ப யாராது…?
உடல் வியர்த்துக் கொட்டியது
பயப்படுகிறேனா..
இல்லை
நான் பயப்படவில்லை…
ஒவ்வொரு அடியும் வேகமாகிறது
பின்னால் வந்த நிழல்
என் முன்னே…
ஐயோ…அம்மா…
“என்ன கனவா…:?
அம்மா அருகே…
சின்னச் சிரிப்பில்
சமாளிப்பு…
“கண்ட கண்ட புத்தகத்தை படிக்காதே
சொன்னால் கேட்டால்தானே”
அம்மாவின்
செல்ல திட்டு
மெல்ல சிரித்தேன்
அன்றைய நாளிதழே
பக்கத்தில் கிடந்தது

Thursday, October 10, 2013

நினைவில் நனைதல்



என் பிரியத்திற்குரிய
புத்தகத்தின்
பக்கங்கள்
கிழிக்கப்பட்டுவிட்டன..
மூடிவைத்திருந்த மயிலிறகும்
தொலைந்து போய்விட்டது
என்ன ஆச்சரியம்…!
மறுபடியும் அதே புத்தகம்
ஒட்டப்பட்டு…
அழகாய்..மயிலிறகும்…

மன்னிப்பாயா..


ஏதோ ஒரு வரி
உனக்காய் எமுதணும் சற்றும் எதிர்பாரா
குற்றம் ஒன்று
சாற்றின் நீ மன்னிப்பாயா…
காற்றோடு நீ போனாய்
கனவுகளை அள்ளிச் சென்றாய்
கவிதைகளை மட்டும்
மிச்சம் வி;ட்டுச் சென்றாய்
பட்டுப்போனதொரு கவி மரம்
தொட்டுத் துளிர்விட வியக்கின்றேன்
நீயா…
இல்லை…
நீயில்லை
அந்த யாரோ எனை
அழைக்கும் போதெல்லாம்….
உன்குரலாய்
உன் கெஞ்சல்களாய்…
மறந்துவிட நினைக்கும்
உன் ஞாபகங்களை
மறுபடியும் தூசிதட்டி
தந்துவிட்டதாய்…
ஒரு மயக்கம்…
ஒரு தடம் மாற்றம்…
சிறு சலனம்…
எல்லாம் ஒன்றாய்…
என்னை மன்னிப்பாயா…

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..