Monday, October 21, 2013

ஒருநாள் கனவு


கண்ணுக்கெட்டிய தூரம்
வரைக்கும்
மணல்திட்டு
வானம்…
இந்த மண்…
நான் தவிர அங்கு யாருமே இல்லை
ஒற்றையாய் ஒரு பறவை
அது கூட இல்லை
எப்படி நான் இங்கு வந்தேன்
எனக்கு தெரியவில்லை
என்னுடன் வந்தவர்களெல்லாம் எங்கே
அதுவும் எனக்கு தெரியவில்லை
எங்கே செல்கிறேன்
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
மணலுள் புதைந்து..
முடியவில்லை
மூச்சிரைக்கின்றது…
தாகம்
தண்ணீரும் இல்லை
மெல்ல நடக்கின்றேன்
சட்டென
பின்னால் ஒரு நிழல்
யாரது…?
தொண்டைவரைக்கும் வந்த வார்த்தை
வெளிவரவில்லை
யாராயிருக்கும்
திருடனா…?
திருடுவதற்கு தான் என்னிடம் எதுவுமே இவ்லையே
காதில் இருந்த
கவரிங் தவிர
பேயா…
சீ… இருக்காது
சின்ன வயதில் கேட்ட
பேய்க் கதைகள் எல்லாம் அப்போதுதானா
ஞாபத்தில் வரவேண்டும்..
அப்ப யாராது…?
உடல் வியர்த்துக் கொட்டியது
பயப்படுகிறேனா..
இல்லை
நான் பயப்படவில்லை…
ஒவ்வொரு அடியும் வேகமாகிறது
பின்னால் வந்த நிழல்
என் முன்னே…
ஐயோ…அம்மா…
“என்ன கனவா…:?
அம்மா அருகே…
சின்னச் சிரிப்பில்
சமாளிப்பு…
“கண்ட கண்ட புத்தகத்தை படிக்காதே
சொன்னால் கேட்டால்தானே”
அம்மாவின்
செல்ல திட்டு
மெல்ல சிரித்தேன்
அன்றைய நாளிதழே
பக்கத்தில் கிடந்தது

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..