Saturday, October 26, 2013

அம்மா இல்லாத முதல் தீபாவளி
















அம்மா இல்லாத முதல் தீபாவளி
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது
மறக்கவே முடியாத அம்மாவை போல- அதுவரை
சந்தோசங்களை மட்டுமே தந்து சென்ற தீபாவளி
முதன் முதலாய்   தீராத வலிதந்தது
எப்போதும் போல இப்போதும் நினைவிருக்கின்றது

காலையில் எழுப்பிவிடும் அம்மா அன்று இல்லை
தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து
வேளையுடன் கோவிலுக்கு அழைத்து செல்வதற்கும்
அம்மா அன்று இல்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இனறும்

புத்தாடை அணிவித்து தலைசீவி பொட்டிட்டு
புதுமையாய் அழகு பார்க்கும் அம்மா இல்லை
விதவிதமாய் பலகாரம் விரும்பி சமைத்து
விருப்போடு பரிமாற அம்மா இருக்வில்லை
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்

அதன் பின்னரான ஒவ்வொரு தீபாவளியிலும் அம்மா இல்லை
அதிகாலை குளியல்…
புத்தாடைபுனைவு….
ஆலையம் செல்லல்
அறுசுவை உணவு
எல்லாம் இப்போது மீண்டும் வந்தாலும்
அம்மா இல்லாத முதல் தீபாவளி
மறக்க முடியவில்லை இன்றும்
உலக்துக்கேயான ஓட்டுமொத்த வெறுமையும்
இப்போதும்
எங்கள் வீட்டில் இருக்கின்றது
அம்மா இல்லாமல்…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..