எப்போதும் யாரையாவது காயப்படுத்தி கொண்டே இருக்கின்றோம்..
ஒரு முறை…
இரண்டாவது முறை…
அதற்கு மேலும் என காயப்படுத்தல்கள் தொடரத்தான் செய்கின்றன…
எமக்கனானவர்களை…
எமது நேசிப்புக்குரியவர்களை…
எம்மில் அக்கறை கொண்டவர்களை
எமக்கு தெரிந்தவர்களை மட்டும்தான் எப்போதும் காணப்படுத்துகின்றோம்…
கத்தியின்றிய …
இரத்தம் சிந்தாத காயப்படுத்தல்கள்…
கண்ணீர் கண்டாலும் விடாத காயப்படுத்தல்கள்…
எப்பவும் ..
எமக்கு பிடித்தாமவர்களை நாம் காயப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம்..
ஒரு கோபப்பார்வையால் காயப்படுத்துகின்றோம்…
அலட்சியப் பார்வையாலும் காயப்படுத்துகின்றோம்…
பாராமுகத்தாலும் காயப்படுத்துகின்றோம்..
மௌனங்களால்..காயப்படுத்துகின்றோம்
வார்த்தைகளாலும் காயப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்…
சொல்வதை கேளாமல் காயப்படுத்துகின்றோம்
கேட்டதையும் செய்யாமல் காயப்படுத்துகின்றோம்..ஒருபோதும்
பேசாமல் காயப்படுத்துகின்றோம்…
பேசிப்பேசியும் காணப்படுத்துகின்றோம்
எப்போதும் எமக்க பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்
வலிக்கும் என்று தெரிந்தும்
மறப்பதில்லை …காயப்படுத்தல்களை….
எப்போதும் எமக்கு பிடித்தமானவர்களை மட்டும்தான் காயப்படுத்துகின்றோம்