அவன் நினைவுகளில் இருந்தும் விடுபட
அவள் தயாராகவில்லை
கேட்டுக்கொண்டிருத்தலை மட்டுமே அவளால் செய்ய முடிகின்றது
இன்று தவறிப்போன அழைப்பிற்காக…
நாளையும்…
நாளைமறுதினமும்
அதற்கு அடுத்த நாளும் அவள்
காத்திருக்கப்போகின்றாள்…
ஆனாலும்..
இன்றைய நாளின் வலி நாளை இருக்கப்போவதில்லை என்பது
அவளுக்கு தெரியும்..
அதற்காக காத்திருத்தல்களில் இருந்தும் விடுபடவும்
அவள் தயாராகவில்லை
No comments:
Post a Comment