Wednesday, November 13, 2013

நீயில்லாத நாள்கள்



ஒவ்வொரு விடியலிலும்
மெலிதாய் ஒரு சோகம்
இனம் புரியாமல்…
என் விழி நனைக்கும்
உனதான பிரிவினை
மீள முடியாhதாய்
ஒரு துயரம்
எனை ஆட்கொள்ளும்

நீ சென்ற வழிபார்த்து
எதையோ இழந்த வெறுமையில்
வீணே கழியும் பொழுதுகளில்
என் நாள்கள் செல்கின்றன…

விதியின் மீதெல்லாம்
இப்போது
எனக்கு வெறுப்புதான் வருகின்றது
உன்னையும் என்னையும்
பிரித்து..
வேடிக்கை பார்க்கின்றது

நேற்றைய விடியலும்
இப்படித்தான்…
இன்றும் இப்படித்தான்
நாளை…hநாளை மறுநாள்
அதன்பின் வரும்
ஒவ்வொரு விடியலிலும்
இப்படித்தான் இருக்கப்போகிறது
நீயில்லாமல்


சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..