Friday, September 20, 2013

வேறென்ன வேண்டும்


நிலா…வான்
கடல்…
நட்சத்திரம்
நீ…நான்

சின்ன மழை
ஒற்றைக் குடை
மெல்லிய சாரல்
நீ… நான்

ஒற்றை புத்தகம்
அழகிய கவி
படிக்கும் நான் பறிக்கும்
நீ…

சின்ன மௌனம்
சில்லறை கோபம்
செல்லக் கெஞ்சல்
நீ…நான்…

முற்றத்து மரம்
ஒற்றை நிழல்…
மெல்லிய இசை…
நீ… நான்…

வேறென்ன வேண்டும்

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..