Tuesday, August 12, 2014

எதிர்பார்ப்புகள்; நிறைவேறாதபோது…………



கோபப்படுகின்றார்கள்
யார் மீதாவது எரிந்து விழுகின்றார்கள்
சிலதை போட்டுடைக்கின்றார்கள்
சிலரை திட்டித் தொலைக்கின்றார்கள்
எதுவும் பேசாமல் இருக்கின்றார்கள்
சாப்பிடவும் பிடிக்காமல் இருக்கின்றார்கள்
முகத்தை தூக்கி வைத்திருக்கின்றார்கள்
தூங்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்
தூக்கம் வராமல் புரள்கின்றார்கள்
தொலைபேசி அடிப்பதை வெறுக்கின்றார்கள்
தூக்கி ரீசிவரை கீழே வைக்கின்றார்கள்
அழுவதற்கும் நினைக்கின்றனர்
யாரும் பார்த்திடாது துடைக்கின்றனர்
இப்படித்தான் எதையாவது செய்கின்றார்கள்
எதிர்பார்த்தது நிறைவேறாதபோது…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..