Wednesday, April 23, 2014

வீதி விபத்து

வீதி விபத்து இருவர் பலி
இன்றைய செய்தியில் இதைப்படித்தேன்…
நேற்றைய செய்தியிலும்
இப்படித்தான் படித்தேன்…
நேற்றைக்கு முதல் நாளும்...
அதற்கு முதல் நாளும் கூட
இதே செய்தியை படித்தேன்
சென்ற கிழமை..
அதற்கு முதற் கிழமை..
போன மாதம்..
என ஒவ்வொரு நாளும்
இதே செய்தியை படித்தேன்
படிக்கிறேன்..
ஆனால்..
நான்கு வருடங்களுக்கு முன்னர்
இபபடிப்பட்ட செய்தியை படித்ததேயில்லை…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..