அழகான பொழுதுகள்...
உன்னோடு முடிந்து விட்டன...
அன்பான பார்வைகளும்...
வார்த்தைகளும்கூட....
உன்னுடனே முடிந்துவிட்டன...
உனக்காக வாழ்ந்த உன்னை விட...
எனக்காக வாழ்ந்த நீயே அதிகம்...
உனக்காக நான் வாழ்வதில்...
தப்பேது....
உலகமும் மாறலாம்...
உருவங்களும் மாறலாம்...
உன் நினைவுகளை எப்படி மாற்ற முடியும்...
நீ எங்கே என்று கேட்பவர்களிடம் எல்லாம்...
நீ இல்லை என்பதை எப்படி சொல்வேன்....
நான்தான்.. இறந்தும்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
நீயோ மரணத்தின் பின்பும்
வாழ்ந்து கொண்டிருக்கிறாய்...
என்னுள்...
2 comments:
நினைவுகள் சாகா வரம் பெற்றவை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
அழகான பார்வைகளும், அன்பான பொழுதுகளும் ஒருவருடனே முடிவதில்லை. பரந்த கடலில் மீன் பிடிப்பது போலத் தான், ஒரு வாழ்வு முடிந்தால் அதோடு அவர் துணையின் வாழ்வும் முடிவதல்ல. காத்திருந்து காலம் வர ஒரு துணையைத் தேடி மரணம் வரும் வரை வாழ்வை வாழவே வேண்டும். காலம் மாறுகிறது. ஒரு வேளை முன்னையதை விட அருமையான வாழ்வு பின்னாலும் அமையலாம். சிந்திக்க வேண்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment