Monday, September 16, 2013

அச்சாணி




பாரதப் போரின் பதினெட்டாம் நாளும் முடிந்தது
பாண்டவர் வெற்றிதான் பாரெங்கும்…
பார்த்தனின் தேருக்கோ பெருங்கர்வம்
“வெற்றி எம்மால்தான்…”
குதிரைகள் கூட குதூகலமாய் கனைத்து கொண்டன…
தேரின் குடையும் சொல்லிற்று…
நீண்ட நேரம் நின்று போரிட நிழல் தந்தேன்…
வெற்றி என்னால்தான்…
தேரின் பீடம் சும்மா இருக்குமா…?
பார்த்தன் நின்று போரிட
நானே உதவினேன்
வெற்றி எனதே….பீற்றிக்கொண்டது…
‘கர்ணனின் நாக அஸ்திரம்
பார்த்தன் மார்பை பதம் பார்த்திருக்கும்…
நாங்கள் மட்டும் தக்கதோர் சமயத்தில்
புதைந்திராவிட்டால்…”
தேர்ச்சில்லுகள் கூட
தமக்குள் சிலிர்த்துக் கொண்டன…
அச்சாணி மட்டும் எதுவும் பேசாமல்
அமைதியாய்  இருந்தது….
கண்ணணின் உபதேசத்தில்….
பார்த்தன் போலவே அதுவும்
பக்குவப் பட்டிருந்தது…

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..