Monday, September 16, 2013

பட்டாம் பூச்சி


காலை நேரத்தில் ஒருநாள்
என் காது உரசி…கன்னம் தொட்டு பறந்தது
ஒரு பட்டாம் பூச்சி
கறுப்பு நிறத்தில் வெள்ளை பொட்டுக்கள்
கண் கொள்ளா அழகு…
முற்றத்து பூச் செடியின் ஒற்றை இலையில்
ஒய்யாராமாய் …தன்
சின்னச் சிறகுகள் விரித்தது..
தொட்டு விட நினைத்து எட்டிப்பிடிக்கையிலே..
விர்” என்று பறந்து வேறு இலை அமர்ந்து
சிரித்தது பட்டாம் பூச்சி…
விட்டுவிட மனமில்லை…
எப்படியும் ஒருக்கா பிடித்திடணும்..
மெல்ல மூச்சை உள்ளெடுத்து…
ஓசைப்படாமல்…
ஒவ்வொரு அடியாய்…சென்று
இரு விரல் கொண்டு
இறகினை தொடுகையில்
சட்டென்று வந்த தும்மலில்
பட்டென்று பறந்தது என் பட்டாம் பூச்சி..
மறுபடியும் சிரித்தது..என்
தலை வருடி எங்கோ பறந்தது..

No comments:

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் ....சச்சிதானந்தம்
.ஒவ்வொரு விடியலும் வாழ்வின் முடிவின் ஆரம்பமே..